sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'முதல்வராக்க தயார் என சொன்னார்': நயினார் நாகேந்திரன்

/

'முதல்வராக்க தயார் என சொன்னார்': நயினார் நாகேந்திரன்

'முதல்வராக்க தயார் என சொன்னார்': நயினார் நாகேந்திரன்

'முதல்வராக்க தயார் என சொன்னார்': நயினார் நாகேந்திரன்

2


ADDED : செப் 08, 2025 03:56 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:56 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரையில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அளித்த பேட்டி:

மத்திய அமைச்சர் அமித் ஷா, நம் கூட்டணி சார்பில், தமிழக முதல்வர் வேட்பாளராாக யாரை அறிவிக்கிறாரோ, அவருக்காக வேலை செய்ய தயார் என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஒரு காலத்தில் பேசினார். தமிழகத்தில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் எங்கள் அனைவரின் நோக்கம்.

ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்தால் லட்சியம் நிறைவேறும். இதை தவிர்த்து விட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறினால், அதற்கு நான் பொறுப்பில்லை. சாதாரணமாக ஒரு குடும்பத்திலேயே எவ்வளவு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த விஷயத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க நான் தயார்.

அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட அ.தி.மு.க., உருவாக வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர், கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us