ADDED : செப் 30, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீண்டும் அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜி, தலைமை செயலகத்தில் நேற்றிரவு பொறுப்பேற்றார். நேற்று மாலை 4:30 முதல் 6:00 மணி வரை ராகுகாலம். அதன்பின், செந்தில் பாலாஜி தலைமை செயலகம் வந்தார். ஏற்கனவே, தான் அமைச்சராக இருந்த அறையிலேயே, மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். மற்ற அமைச்சர்கள் இன்று தலைமை செயலகம் வர உள்ளனர்.
துணை முதல்வரான உதயநிதியின் இல்லத்தில், அமைச்சர் என குறிப்பிடப்பட்டு இருந்த பெயர் பலகை மாற்றப்பட்டு, துணை முதல்வர் என்று எழுதப்பட்ட புதிய பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.