/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்: பயனாளிகள் தேர்வு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்: பயனாளிகள் தேர்வு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்: பயனாளிகள் தேர்வு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்: பயனாளிகள் தேர்வு முகாம்
ADDED : அக் 13, 2023 11:30 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.
தையல் ஆசிரியை மணிமொழி மாற்றுத்திறனாளிகள் தையல்திறன் குறித்து ஆய்வு செய்தார். இதில் தையல் தொழில் திறன் அனுபவத்தின் அடிப்படையில் 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

