13 மாவட்டங்களில் இன்று கனமழை டிச. 15ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு
13 மாவட்டங்களில் இன்று கனமழை டிச. 15ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு
ADDED : டிச 13, 2024 02:55 AM
சென்னை:வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. எனினும், இதன் மேக கூட்டம், தமிழகம் முழுதும் பரவி காணப்படுவதால், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த அமைப்பு மேலும் வலுகுறைந்து, மேற்கு திசையில் மெல்ல நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் காணப்படும், ஈரப்பத குவிதல் காரணமாக, தற்போது மழை பெய்கிறது.
டிச.15ம் தேதி வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது உருவான பிறகு, எந்த திசையில் நகரும் என்பது தெரியவரும். தமிழகம், புதுச்சேரியில், வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது வரை சராரியாக, 46 செ.மீ., மழை பெய்துள்ளது, இந்த காலத்தில் இயல்பான மழை அளவு, 41 செ.மீ., ஆகும். தற்போது இயல்பைவிட, 16 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.
இன்று மிதமான மழை
தென் மாவட்டங்களில் அனேக இடங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால்.
கனமழை
மதுரை,
திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோவை,
திருப்பூர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.

