sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 9 வரை கனமழை தொடரும்

/

தமிழகத்தில் 9 வரை கனமழை தொடரும்

தமிழகத்தில் 9 வரை கனமழை தொடரும்

தமிழகத்தில் 9 வரை கனமழை தொடரும்


ADDED : அக் 04, 2024 11:10 PM

Google News

ADDED : அக் 04, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வடக்கில் இருந்து வரும் வெப்பக்காற்று காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

வங்கக்கடலில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை. இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த பின்னணியில், வடக்கில் இருந்து வரும் வெப்பக்காற்று காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும் 9ம் தேதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று


புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலுார், மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்யும்.ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவையில் நாளை கனமழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.








      Dinamalar
      Follow us