sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா:2 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

/

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா:2 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா:2 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா:2 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

2


ADDED : ஜன 27, 2025 06:47 PM

Google News

ADDED : ஜன 27, 2025 06:47 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், பெண் பக்தர்கள் உடை மாற்றும் கூடத்தில் ரகசிய கேமரா பொருத்திய இருவரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

நாட்டின் மிக முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடுவது வழக்கம்.

இவ்வாறு நீராடும் பக்தர்கள், அருகேயுள்ள தனியார் உடை மாற்றும் கூடங்களில் சென்று உடை மாற்றிக்கொண்டு கோவிலுக்கு செல்கின்றனர். இத்தகைய தனியார் உடை மாற்றும் கூடங்களில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அங்கு உடை மாற்றச் சென்ற பெண் ஒருவர் கண்டுபிடித்தார்.

அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உடை மாற்றும் கூடத்தை நடத்திய மீரான் மைதீன், ராஜேஷ் கண்ணன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் உடனடியாக, அனைத்து உடை மாற்றும் கூடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, விடுதிகள், தனியார் கட்டண குளியலறைகளுக்கு பல்வேறு விதிமுறைகள் அமல் செய்யப்பட்டன.

இந்நிலையில், உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன், மீரான் மைதீன் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட எஸ்.பி., பரிந்துரை அடிப்படையில் இந்த உத்தரவை கலெக்டர் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us