sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிகாரிகளை துன்புறுத்த பொது நல வழக்கு; ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

/

அதிகாரிகளை துன்புறுத்த பொது நல வழக்கு; ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

அதிகாரிகளை துன்புறுத்த பொது நல வழக்கு; ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

அதிகாரிகளை துன்புறுத்த பொது நல வழக்கு; ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்


ADDED : ஆக 31, 2025 06:40 AM

Google News

ADDED : ஆக 31, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கில் பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கோலப்பன்சேரியில், 400 அடி பைபாஸ் சாலையில், கருப்பசாமி ஆனந்த் என்பவர், 'எஸ்.ஜி.ஆர்., பியூல்' என்ற பெயரில், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இந்த பெட்ரோல் பங்க், உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழே, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டம், நின்னக்கரை கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எஸ்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை; அரசு நடத்திய ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது' என, அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, சில புகைப்படங்களை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் இல்லை. புகைப்படங்களை ஆதாரங்களாக கருத முடியாது.

முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல், பொது நல வழக்குகளை தாக்கல் செய்யக்கூடாது என, அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தும், எந்த அடிப்படையும் இல்லாமல், எதிர் மனுதாரர் களை துன்புறுத்தும் நோக்கிலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையிலும், இந்த பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்த அபராத தொகையை, புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு, ஒரு மாதத்தில் மனுதாரர் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us