ADDED : ஆக 08, 2025 11:20 PM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் இலாகாக்களை, ஆக.,11 முதல் மாற்றி அமைத்து, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இதுவரை எம்.பி., - எம்.எல்.ஏ.,-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகன், மேல் முறையீடு மற்றும் சிவில் மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியா க மாற்றப்பட்டு உள்ளார்.
இனி, எம்.பி., - எம்.எல்.ஏ.,-க்கள் மீதான வழக்குகளை, நீதிபதி என். சதீஷ்குமார் விசாரிப்பா ர்.
குற்றவியல் வழக்குகள் மற்றும் முன்ஜாமின் வழக்குகளை, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஹிந்து அறநிலையத்துறை, திரைப்படம், மின்வாரியம் தொடர்பான வழக்குகளை, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சி.பி.ஐ., தொடர்பான வழக்குகளை நீதிபதி எம்.நிர்மல்குமார், குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரிக்க உள்ளனர்.
இதேபோல, மேலும் பல நீதிபதிகளின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.