sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீசார், வக்கீல் மோதல் சம்பவம்; உயர் நீதிமன்ற உத்தரவு தள்ளிவைப்பு

/

போலீசார், வக்கீல் மோதல் சம்பவம்; உயர் நீதிமன்ற உத்தரவு தள்ளிவைப்பு

போலீசார், வக்கீல் மோதல் சம்பவம்; உயர் நீதிமன்ற உத்தரவு தள்ளிவைப்பு

போலீசார், வக்கீல் மோதல் சம்பவம்; உயர் நீதிமன்ற உத்தரவு தள்ளிவைப்பு


ADDED : ஏப் 10, 2025 03:51 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போலீசார் - வழக்கறிஞர்கள் மோதல் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான உத்தரவை, உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, 2009ல் வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது, வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர்களை கைது செய்தபோது, போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது.

கடந்த 2009, பிப்ரவரியில் நடந்த இந்த மோதலில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என, பலர் தாக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, காவல் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. 2010ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ரஜினிகாந்த் உட்பட 28 வழக்கறிஞர்களும், நான்கு போலீஸ் அதிகாரிகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள், நீதிபதி எம்.நிர்மல்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன், ''கடந்த 16 ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் போலீசார். எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' எனக் கூறி, எழுத்துப்பூர்வமான வாதங்களையும் தாக்கல் செய்தார்.

அதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தின் அனைத்து நிகழ்வுகளையும், தானும் ஒரு வழக்கறிஞராக இருந்து நேரில் பார்வையிட்டதாகக் கூறிய நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us