sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளழகர் கோவிலில் மேம்பாட்டு பணிகள் ஒட்டுமொத்தமாக நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

/

கள்ளழகர் கோவிலில் மேம்பாட்டு பணிகள் ஒட்டுமொத்தமாக நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

கள்ளழகர் கோவிலில் மேம்பாட்டு பணிகள் ஒட்டுமொத்தமாக நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

கள்ளழகர் கோவிலில் மேம்பாட்டு பணிகள் ஒட்டுமொத்தமாக நிறுத்த ஐகோர்ட் உத்தரவு


ADDED : அக் 25, 2025 01:52 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மது ரை, அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் மேம்பாட்டு பணியை ஒட்டுமொத்தமாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மேலுார், வெள்ளரிப்பட்டி பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு :

அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில், 40 கோடி ரூபாயில் கழிப்பறை, பேவர் பிளாக் பதித்தல், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கடைகள், பக்தர்கள் தங்கும் விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணியை மேற்கொள்ள தமிழக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது.

இதன் அடிப்படையில் கோவில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறை வேற்றியது. பணி யை கோவில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதித்தது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

செப்., 1ல் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கோவில் வளா க கிழக்கு பகுதி பெரியாழ்வார் திருவரசு மற்றும் தெற்கில் வசந்த மண்டபம் பகுதியில் கோட்டை சுவரை திரும்ப கட்டுதல், கோ வில் வளாகத்தில் பக்தர்கள் தங்க புது விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டது.

இது போல், நாகப் பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் வெங்கடேஷ் சவுரிராஜன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். ஆக., 28ல் இரு நீதிபதிகள் அமர்வு, 'கடைகள், உணவருந்தும் கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு அக்., 22ல் விசாரித்தது.

பிரபு தரப்பு வழக்கறிஞர்கள் வெங்கடேசன், அருண் சுவாமிநாதன், 'அறநிலையத்துறை சட்டத்தை பின்பற்றி அரசாணை வெளியிடவில்லை. அறங்காவலர்கள் குழு தான் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு, இறுதி செய்ய வேண்டும். இக்கோவிலில் செயல் அலுவலர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு, இறுதி செய்தது செல்லாது.

'வனப்பகுதி அருகே கட்டுமானம் மேற்கொள்ள வனத்துறையிடம் தடையில்லா சான்று பெறவில்லை. உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெறவில்லை' என, வாதிட்டனர் .

நீதிபதி கள், 'ஒட்டுமொத்த கட்டுமான பணியையும் நிறுத்தி வைக்க வேண்டும். கோவில் அறங்காவலர்கள் குழு பதிலளிக்கும் வகையில் அவர்களை எதிர்மனுதாரராக இந்நீதிமன்றம் சேர்த்துக் கொள்கிறது . விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us