sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனைத்து உள்ளாட்சிகளிலும் சொத்து வரி நிர்ணயத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு மதுரை மாநகராட்சி முறைகேடால் உயர் நீதிமன்றம் அதிரடி

/

அனைத்து உள்ளாட்சிகளிலும் சொத்து வரி நிர்ணயத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு மதுரை மாநகராட்சி முறைகேடால் உயர் நீதிமன்றம் அதிரடி

அனைத்து உள்ளாட்சிகளிலும் சொத்து வரி நிர்ணயத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு மதுரை மாநகராட்சி முறைகேடால் உயர் நீதிமன்றம் அதிரடி

அனைத்து உள்ளாட்சிகளிலும் சொத்து வரி நிர்ணயத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு மதுரை மாநகராட்சி முறைகேடால் உயர் நீதிமன்றம் அதிரடி


ADDED : ஆக 27, 2025 03:29 AM

Google News

ADDED : ஆக 27, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை மாநகராட்சியின் செயல் திட்டத்தை பின்பற்றி, பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அசையா சொத்துக்களை மறு அளவீடு செய்து, வரி சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சொத்து வரி நிர்ணயத்தில் நடந்த முறைகேடு குறித்து, மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனு மீது, ஜூலை 17ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவின்படி, வரி நிர்ணய முறைகேடுகளை விசாரிக்க, மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆக., 20ல் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'மதுரை மாந க ராட்சி பகுதியிலுள்ள ஒட்டு மொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை அளவீடு செய்யும் பணி எவ்வளவு கால வரம்பிற்குள் மேற்கொள்ளப்படும்.

'அதற்குரிய செயல் திட்டத்தை, கமிஷனர் ஆக., 26ல் தாக்கல் செய்ய வேண்டும்' என, கூறி இருந்தனர்.

இதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு இவ்வழக்கை நேற்று விசாரித்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகேந்திரன், 'இவ்வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமினில் வெளியே சென்றுள்ளனர்' என, தெரிவித்தார்.

நீதிபதிகள், 'கைது செய்வது, ஜாமினில் செல்வது வழக்கமான நடைமுறை தான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பர். ஜாமின் அனுமதிக்கக்கூடாது என உங்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து, தேவையெனில் இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம்' என, தெரிவித்தனர்.

இதற்கிடையே, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார், மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் விநாயக் ஆகியோர் ஆஜராகி, கமிஷனரின் செயல் திட்டத்தை தாக்கல் செய்தனர்.

அதில் தெரிவித்துள்ளதாவது:

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 3 லட்சத்து 49,839 சொத்து வரி கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் ஜூலையில் திருமண மண்டபங்கள், வணிக கட்டடங்களில் ஆய்வு செய்தனர்.

அதில், 69 சொத்துக்களுக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்குரிய

தொடர்ச்சி 6ம் பக்கம்






      Dinamalar
      Follow us