sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை உயர் நீதிமன்றம் தடை

/

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை உயர் நீதிமன்றம் தடை

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை உயர் நீதிமன்றம் தடை

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை உயர் நீதிமன்றம் தடை


ADDED : ஜூலை 03, 2025 05:22 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் மற்றும் குடும்பத்தினர் பற்றி சமூக வலை தளங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர், அவதுாறாக கருத்து பதிவிட்டனர்.

இது தொடர்பாக, சீமான் மீது திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அதே நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமான் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார்; வருண்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us