திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஆக 29, 2025 01:05 PM

திருச்செந்தூர்: திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சில அங்கீகாரமற்ற நபர்கள், புரோக்கர்கள் பக்தர்களிடம் தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதைத் தடுக்க உத்தரவிட ஐகோர்ட் மதுரைக்கிளையில்  பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* சட்டவிரோத டிக்கெட் விற்பனையை தடுக்க அறநிலையத்துறை, போலீஸ் நடவடிக்கை வேண்டும்.
* முறைகேடு குறித்து போலீசார் வழக்கு பதியவேண்டும், கூடுதல் போலீசாரை  பாதுகாப்பில் ஈடுபடுத்த தூத்துக்குடி எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சட்டவிரோதமாக டிக்கெட் விற்ப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

