ADDED : ஜன 22, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலியை சேர்ந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி கலைக்கண்ணன், ராமபிரான் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்து தெரிவித்திருந்தார். போலீசில் புகார் செய்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் திருநெல்வேலி டவுன் வாகையடி முனையில் ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போலீஸ் அனுமதி மறுத்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.