sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காஷ்மீரில் ஹிந்துக்கள் படுகொலை; இது தேச அவமானம்; ஹிந்து மகா சபை

/

காஷ்மீரில் ஹிந்துக்கள் படுகொலை; இது தேச அவமானம்; ஹிந்து மகா சபை

காஷ்மீரில் ஹிந்துக்கள் படுகொலை; இது தேச அவமானம்; ஹிந்து மகா சபை

காஷ்மீரில் ஹிந்துக்கள் படுகொலை; இது தேச அவமானம்; ஹிந்து மகா சபை


ADDED : ஏப் 30, 2025 02:33 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: பயங்கரவாதத்தில் மதம் பார்க்கக் கூடாது, யார் செய்தாலும் அப்புறப்படுத்த வேண்டும் என அகில பாரத ஹிந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டி:


பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாதிகள், காஷ்மீரில் ஹிந்துக்களை குறிவைத்து தாக்கி உள்ளனர். இது தேசத்துக்கு அவமானம். பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், அரசு தரப்பு இரக்கம் பார்க்க வேண்டியதில்லை.

இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பயங்கரவாதத்தை முறியடிக்கும் மத்திய அரசின் செயல்பாடு களுக்கு ஹிந்து மகா சபா உறுதுணையாக இருக்கும்.

பயங்கரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக, கோவில் கோவிலாக சென்று இறைவனிடம் வேண்டுகிறோம். இந்த நேரத்தில், பெரும்பான்மை மக்களாக இருக்கும் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். கோவில் நகரங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியா விரைவில் ஹிந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும். ஹிந்து ராஷ்டிரம் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us