sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெறிநாய்களை பிடியுங்கள்

/

வெறிநாய்களை பிடியுங்கள்

வெறிநாய்களை பிடியுங்கள்

வெறிநாய்களை பிடியுங்கள்

2


ADDED : பிப் 18, 2025 07:23 AM

Google News

ADDED : பிப் 18, 2025 07:23 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் இன்னொரு அறிக்கை:

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட காங்கேயம் சட்டசபை தொகுதியில் வெறிநாய் தாக்குதலால், நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகி உள்ளன. இதனால், ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு, பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஈரோடு - பழனி நெடுஞ்சாலையில், பாரவலசு என்ற இடத்தில், கடந்த வாரம் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக அகற்றி உள்ளனர். கடந்த 16ம் தேதி, ஈரோடு மாவட்டம், குட்டக்காட்டைச் சேர்ந்த விவசாயிகளின் 25 ஆடுகள், வெறிநாய் தாக்குதலுக்கு பலியாகி உள்ளன.

வெறிநாய் தாக்குதலால், கால்நடைகள் மட்டுமின்றி, சிறு குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழகம் முழுதும், சாலைகளில் திரியும் வெறிநாய்களை பிடிக்க, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறிநாய்களால் ஆடுகளை இழந்துள்ள விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us