ADDED : பிப் 24, 2026 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில், 14,000க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களிலும், வெள்ளம், தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களிலும், போலீசாருக்கு உதவியாக இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் .
ஊர்க்காவல் படையினர், தங்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து, 60 ஆக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர். இதை பரிசீலனை செய்த அரசு, ஊர்க்காவல் படையினரின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது.

