sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இந்த வாரம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான வார பலன்

/

இந்த வாரம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான வார பலன்

இந்த வாரம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான வார பலன்

இந்த வாரம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான வார பலன்


UPDATED : மார் 22, 2024 11:06 AM

ADDED : மார் 22, 2024 11:03 AM

Google News

UPDATED : மார் 22, 2024 11:06 AM ADDED : மார் 22, 2024 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (22.3.2024 முதல் 28.3.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்


கேது, செவ்வாய், சனி நன்மைகளை வழங்குவர். முருகப் பெருமானை வழிபட வாழ்க்கை வளமாகும்.

அசுவினி: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் தொழிலில் உண்டான நெருக்கடி விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். வியாபாரம் லாபமாகும்.

பரணி: உங்கள் நட்சத்திர நாதனும் ராசி நாதனும் இணைந்து லாப ஸ்தானத்தில் சனியுடன் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உத்தியோகஸ்தர்களுக்கு உண்டான நெருக்கடி விலகும். சொத்து சேர்க்கையும் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திர நாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி,செவ்வாய், சுக்கிரனால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நெருக்கடி விலகும். முயற்சி சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்


ராகு, சூரியன், புதன் நன்மைகளை வழங்குவர். துர்கையை வணங்க துன்பம் விலகும்.

கார்த்திகை 2,3,4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பணவரவு அதிகரிக்கும். செயல் லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும், புதிய முயற்சி வெற்றி பெறும். வாரத்தின் பிற்பகுதியில் ஒரு சிலருக்கு தொழிலில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ரோகிணி: லாப ஸ்தானத்தில் சூரியன், ராகு, புதன் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி வெற்றி பெறும். அரசுவழி செயலில் நன்மை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.

மிருகசீரிடம் 1,2: தொழில் ஸ்தானத்தில் தொழில் காரகனுடன் ராசி நாதனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செயல்களில் முன்னேற்றம் தோன்றும். பொருளாதாரத்தில் உண்டான தடை விலகும். அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.

மிதுனம்


சுக்கிரன், சனி, சூரியன், புதன், குரு நன்மைகளை வழங்குவர். வேங்கடவனை வழிபட வாழ்க்கை வளமாகும்.

மிருகசீரிடம் 3,4: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, சுக்கிரனால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நெருக்கடி நீங்கும். முயற்சி லாபமாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர். வருமானம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடு வேண்டுதலை நிறைவேற்றும்.

திருவாதிரை: பத்தாமிட சூரியன், லாப ஸ்தான குருவால் விருப்பம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். முயற்சி பலிக்கும். சட்ட ரீதியாக ஏற்பட்ட சிக்கல் விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

புனர்பூசம் 1,2,3: பாக்கிய சனியும், ஜீவன சூரியனும் லாப குருவும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். புதிய செயல்களில் நன்மை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடியும்.

கடகம்


கேது நன்மைகளை வழங்குவார். சிவனை வழிபட சங்கடம் தீரும்.

புனர்பூசம் 4: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது தைரியத்தை அதிகரிப்பார். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவர். சொத்து விவகாரம் சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை.

பூசம்: உங்கள் ராசிநாதனின் சஞ்சார நிலைகளால் நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். தொழில் வியாபார நெருக்கடி விலகி முன்னேற்றம் உண்டாகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

ஆயில்யம்: தைரியமாக செயல்படுவதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த வாரத்தில் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் உடல்நிலையில் கவனம் செலுத்துவதுடன் இயந்திரப்பணிகளில் நிதானம் தேவை. குரு பகவானின் பார்வைகளால் வரவு உண்டாகும். எதிர்ப்பு விலகும்.

சிம்மம்


புதன், குரு நன்மைகளை வழங்குவர். சூரியனை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

மகம்: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

பூரம்: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

உத்திரம் 1: மனக்காரகன் சந்திரன், தனக்காரகன் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி வரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

கன்னி


செவ்வாய், சனி நன்மைகளை வழங்குவார். மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட விருப்பம் நிறைவேறும்.

உத்திரம் 2,3,4: ஞாயிறு மதியம் வரை சந்திரனால் செலவு அதிகரித்தாலும் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி, செவ்வாயால் சங்கடம் தீரும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

அஸ்தம்: உங்கள் நட்சத்திராதிபதி சனி ஞாயிறில் செலவுகளை அதிகரிப்பார். மற்ற நாட்களில் லாபத்தை வழங்குவார். உடலில் இருந்த பாதிப்பு விலகும். முயற்சிக்குரிய வருமானம் உண்டாகும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

சித்திரை 1,2: ஆறாமிட சனி, செவ்வாய் மற்றும் குரு பகவானின் பார்வைகளால் எண்ணம் பூர்த்தியாகும். பணவரவு திருப்தி தரும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சாதுரியமாக செயல்பட்டு சிறப்படைவீர்.

துலாம்


சுக்கிரன், சூரியன், ராகு, புதன், குரு நன்மையை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வணங்கி வழிபட வளம் பெருகும்.

சித்திரை 3,4: குரு பகவானின் பார்வை ராசிக்கு இருப்பதால் முன்னேற்றம் உண்டாகும். செயல்கள் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தடைபட்டிருந்த வேலை நடைபெறத் தொடங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

சுவாதி: வாரம் முழுவதும் சுக்கிரன், புதன், சூரியன், ராகு, குரு உங்கள் செயல்களில் லாபத்தை உண்டாக்குவர். ஆரோக்கியம் சீராகும். முயற்சி பலிதமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர் விலகிச் செல்வர். அரசு வழி முயற்சி வெற்றியாகும்.

விசாகம் 1,2,3: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், ராகுவால் முயற்சி முன்னேற்றம் அடையும். செயல்களில் வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும், வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாறுதல் உண்டாகும்.

விருச்சிகம்


சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவர். முருகனை வணங்கி வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம் 4: குரு பகவானின் பார்வைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிரி விலகிச் செல்வர். சுக ஸ்தான சுக்கிரனால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும்.

அனுஷம்: லாப ஸ்தான கேது, குரு பகவானின் பார்வை உங்கள் தொழிலில் லாபம் உண்டாக்கும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடை விலகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் சலுகைகளும் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

கேட்டை: செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு உண்டாகும். தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.

தனுசு


செவ்வாய், சனி, சுக்கிரன், புதன் குரு நன்மைகளை வழங்குவர். குல தெய்வத்தை வழிபட நினைத்த செயல் வெற்றியாகும்.

மூலம்: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் திட்டமிட்டு நினைத்ததை சாதிப்பீர். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சனியால் உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்ப்பு விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

பூராடம்: ஐந்தாமிட குருவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மூன்றாமிட சனி, செவ்வாயால் அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல் வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெள்ளிக்கிழமை செயல்களில் விழிப்புணர்வு தேவை.

உத்திராடம் 1: மூன்றாமிட சனி செவ்வாயால் இதுவரை இருந்த சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சனிக்கிழமை செயல்களில் சிரமம் தோன்றும்.

மகரம்


சுக்கிரன், ராகு, சூரியன் நன்மைகளை வழங்குவர். பாடலீஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.

உத்திராடம் 2,3,4: கடந்த வார சங்கடம் நீங்கும் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் ராகுவால் உங்கள் முயற்சி வெற்றியாகும், செயல்கள் லாபமாகும். இரண்டாமிட சுக்கிரனால் பண வரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். சனிக்கிழமை சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம்.

திருவோணம்: தன, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. சூரியன் ராகு சஞ்சார நிலையால் முயற்சி வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். ஞாயிறு, திங்களில் சில நெருக்கடி தோன்றும்.

அவிட்டம் 1,2: குரு பகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் வியாபாரத்தில் இருந்த தடை விலகும் எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். ஞாயிறு திங்களில் சந்திராஷ்டமம் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்: 22.3.2024 அதிகாலை 3:26 மணி - 24.3.2024 மதியம் 3:04 மணி

கும்பம்


சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அவிட்டம் 3,4: குடும்ப ஸ்தானத்தில் ராகு, ஆயுள் ஸ்தானத்தில் கேது, ஜென்மத்தில் சனி என்று சஞ்சரிப்பதால் செயல்களில் அதிகபட்ச கவனம் தேவை. இதே நேரத்தில் பாக்ய ஸ்தானத்தில் குருப்பார்வை உண்டாவதால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். லாபம் ஏற்படும். செவ்வாய்க்கிழமை உங்கள் செயல்களில் சில சங்கடம் தோன்றி மறையும்.

சதயம்: ராகு, குரு, கேது, சூரியன், சனி என்று உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கினாலும் ஜென்ம சுக்கிரனும் குருவின் பார்வைகளும் முயற்சிகளை வெற்றியாக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், வருமானம் அதிகரிக்கும். செவ்வாய், புதனில் செயல்களில் நெருக்கடி உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: இந்த வாரம் உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும். அரசு வழியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும் என்றாலும் அதை சமாளிப்பீர். புதன்கிழமை செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்: 24.3.2024 மதியம் 3:05 மணி - 29.3.2024 அதிகாலை 2:24 மணி

மீனம்


குரு, சுக்கிரன் நன்மையை வழங்குவர். வராகியை வழிபட சங்கடம் குறையும்.

பூரட்டாதி 4: உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியன் ராகுவால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சிரமம் தோன்றும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாழக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.

உத்திரட்டாதி: குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். விரய ஸ்தானத்தில் சனி, செவ்வாய். ஜென்ம ராசிக்குள் சூரியன் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலையில் கவனக்குறைவு ஏற்பட்டு அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்.வியாழக்கிழமை விழிப்புணர்வு அவசியம்.

ரேவதி: உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இரண்டாமிட குருவும் பனிரெண்டாமிட சுக்கிரனும் உங்களுக்கு நல்லதை செய்வர். பொருளாதார நிலை உயரும் என்றாலும் ஜென்ம ராகு சப்தம கேதுவால் சஞ்சலம் சங்கடம் தோன்றும்.

சந்திராஷ்டமம்: 27.3.2024 அதிகாலை 2:25 மணி - 29.3.2024 மதியம் 12:03 மணி






      Dinamalar
      Follow us