sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேரிடரில் மக்களை காப்பாற்றுவது எப்படி? போட்டியில் தமிழகம் முதலிடம்

/

பேரிடரில் மக்களை காப்பாற்றுவது எப்படி? போட்டியில் தமிழகம் முதலிடம்

பேரிடரில் மக்களை காப்பாற்றுவது எப்படி? போட்டியில் தமிழகம் முதலிடம்

பேரிடரில் மக்களை காப்பாற்றுவது எப்படி? போட்டியில் தமிழகம் முதலிடம்


ADDED : அக் 19, 2025 01:38 AM

Google News

ADDED : அக் 19, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பேரிடர் காலங்களில், அதிக இழப்பு ஏற்படாதவாறு, மக்களை காப்பாற்றும் மண்டல அளவிலான போட்டியில், தமிழக அணி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை ஆவடியில், தமிழ்நாடு பேரிடர் அமைப்பு படை செயல்படுகிறது. இந்த படையினர், பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்று, பெரிய அளவிலான இழப்பு ஏற்படாதவாறு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற மாநிலங்களில் தீயணைப்பு துறையின் கீழ் இயங்கினாலும், தமிழகத்தில் கூடுதல் டி.ஜி.பி., தினகரன், கமாண்டன்ட் அய்யாசாமி தலைமையில், 1,000 பேருடன், தமிழ்நாடு பேரிடர் அமைப்பு படை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் தேசிய பேரிடர் படை, அவ்வப்போது, மாநில படைகளுக்கு பயிற்சி அளித்து, போட்டிகளையும் நடத்தி வருகிறது.

அதன்படி, ஒடிஷா மாநிலத்தில், இயற்கை பேரிடரின் போது, பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாதவாறு, பேராபத்தில் மக்களை மீட்பது, அவர்களின் உடைமையை மீட்பது குறித்து போட்டி நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக, தெற்கு மற்றும் மத்திய மண்டல அளவிலான போட்டியில், தமிழக பேரிடர் மீட்பு படையை சேர்ந்த உதவி கமாண்டன்ட் மணிமாறன், எஸ்.ஐ.,க்கள் கணபதி, பிரபகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில், தமிழக அணி முதலிடமும், ஆந்திரா இரண்டாம் இடமும் பிடித்தன.

இதைத்தொடர்ந்து, தேசிய அளவில், மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் இடையோன போட்டி, உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில், வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.






      Dinamalar
      Follow us