sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

/

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது


ADDED : ஜூன் 10, 2025 06:45 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தல்லாக்குளம் : மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமரத்தினம், 60; பிளம்பர்; இவரது மனைவி மீனலோச்சினி, 55; மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். ராமரத்தினம் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், தல்லாகுளம் போலீசில் மீனலோச்சினி புகாரில், ராமரத்தினத்தை போலீசார் கண்டித்து அனுப்பினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் மீனலோச்சினி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக ராமரத்தினம் தெரிவித்தார். மகன், மகள் குடும்பத்துடன் வந்தனர். மீனலோச்சினி உடல் அருகே உடைக்கப்பட்ட தேங்காயை வைத்து ராமரத்தினம் சோகத்துடன் இருந்தார்.

இதுகுறித்து, ராமரத்தினத்திடம் கேட்டபோது, அவர் மழுப்பியுள்ளார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக மகன் பிரபாகரன் தல்லாக்குளம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மீனலோச்சினி தலையில் வெட்டப்பட்டு இறந்தது உறுதியானது.கொலையை மறைக்க, மனைவி வழுக்கி விழுந்தது போல், 'செட்டப்' செய்து, ராமரத்தினம் நாடகமாடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us