sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குடும்ப பிரச்னையில் மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

/

குடும்ப பிரச்னையில் மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

குடும்ப பிரச்னையில் மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

குடும்ப பிரச்னையில் மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை


ADDED : ஜூன் 11, 2025 03:21 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 03:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி கொன்றுவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65). இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற மகளும் உள்ளனர்.

வித்யாசாகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இதற்கு உடன்படாத வேலுச்சாமி மனைவியுடன் சண்டை போட்டு விட்டு, சொந்த ஊரான கரூர் மாவட்டம், சின்ன தாராபுரத்திற்கு சென்று விட்டார். வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தில் சாமியாத்தாள் அவரது மகன் மற்றும் மருமகள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் வழக்கம் போல் சாமியாத்தாள் தோட்டத்திற்கு ஆடுமேய்க்க சென்றுள்ளார். 9 மணியளவில் அங்கு சென்ற வேலுச்சாமி, வாய் தகராறில் ஈடுபட்டு சாமியாத்தாளை கல், கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வேலுச்சாமி மறைத்து வைத்திருந்த விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us