sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்

/

சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்

சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்

சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்

9


UPDATED : ஏப் 19, 2025 04:58 PM

ADDED : ஏப் 19, 2025 03:55 PM

Google News

UPDATED : ஏப் 19, 2025 04:58 PM ADDED : ஏப் 19, 2025 03:55 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன். வந்தவுடன் களத்தில் இறங்கி விடுவேன்' என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை, போயஸ்கார்டனில் நிருபர்களை சீமான் சந்தித்தார். நிருபர்: தமிழகம் டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என முதல்வர் பேசியுள்ளார்?

சீமான் பதில்: முக்கியமான பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை. எங்களுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. முக்கியமான திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

அதனால் என் மாநில வரி தர முடியாது என்று சொல்வது அவுட் ஆப் கண்ட்ரோல். உரிமையை பறிகொடுத்து விட்டு புலம்புவது அவுட் ஆப் கண்ட்ரோல் இல்லை. இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எல்லாவற்றையும் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டசபை, பார்லிமென்ட் எதற்கு? மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு போன கட்சியிடமே கூட்டணி வைத்துக் கொண்டு மாநில உரிமையை பேசுவது கேலிக் கூத்தானது.

நான் தனித்து போட்டியிடுவேன். போட்டிக்கு தயார் ஆகி கொண்டு இருக்கிறேன். சின்னத்துக்காக காத்து இருக்கிறேன். வந்த உடன் களத்தில் இறங்கிவிடுவேன். இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us