sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

படிக்காததால் நான் துணை முதல்வர் ஆனேன்: உதயநிதி குஷி பேச்சு

/

படிக்காததால் நான் துணை முதல்வர் ஆனேன்: உதயநிதி குஷி பேச்சு

படிக்காததால் நான் துணை முதல்வர் ஆனேன்: உதயநிதி குஷி பேச்சு

படிக்காததால் நான் துணை முதல்வர் ஆனேன்: உதயநிதி குஷி பேச்சு

1


ADDED : ஜூலை 29, 2025 02:38 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 02:38 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''நன்றாக படித்த என் தாய் மாமா டாக்டர் ஆன நிலையில், சரியாக படிக்காததால், நான் துணை முதல்வர் ஆனேன்,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் கவுன்சில் சார்பில், நுாற்றாண்டு துவக்க விழா நேற்று நடந்தது. இதில், 2025ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை, 22 செவிலியர்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.

பின், அவர் பேசியதாவது:


மருத்துவ ஊரக நல சேவைகள் இயக்குநரும், இந்த அமைப்பின் தலைவருமான ராஜமூர்த்தியை பலருக்கும் தெரியும். ஆனால், அவர் என் சொந்த தாய் மாமா என்பது பலருக்கும் தெரியாது. அவரும், நானும் கோபாலபுரம் வீட்டில் ஒரே அறையில் தான் தங்கி இருந்தோம்; ஒன்றாக படித்தோம்.

அவர் நன்றாக படித்ததால் டாக்டராகி விட்டார். நான் சரியாக படிக்காததால், துணை முதல்வர் ஆகி விட்டேன். அதற்கு மிக மிக முக்கிய காரணம் ராஜமூர்த்தி தான்.

நோய்கள் பரவாமல் இருக்க, தடுப்பூசிகள் மிக மிக அவசியம். தடுப்பூசி போடச் சொல்லி, பின்னாலேயே சென்று விரட்டிய காலம் இருந்தது. தற்போது மக்களுக்கு புரிய வைத்து, தடுப்பூசி போட வைப்பதில் செவிலியர் களுக்கு முக்கிய பங்கு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us