sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 காங்.,கில் எனக்கு சுல்தானும் தெரியாது; சக்கரவர்த்தியும் தெரியாது: கார்த்தி எம்.பி.,

/

 காங்.,கில் எனக்கு சுல்தானும் தெரியாது; சக்கரவர்த்தியும் தெரியாது: கார்த்தி எம்.பி.,

 காங்.,கில் எனக்கு சுல்தானும் தெரியாது; சக்கரவர்த்தியும் தெரியாது: கார்த்தி எம்.பி.,

 காங்.,கில் எனக்கு சுல்தானும் தெரியாது; சக்கரவர்த்தியும் தெரியாது: கார்த்தி எம்.பி.,


ADDED : ஜன 01, 2026 02:02 AM

Google News

ADDED : ஜன 01, 2026 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: “காங்கிரசில் எனக்கு சுல்தானும் தெரியாது; சக்கரவர்த்தியும் தெரியாது,'' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், அவர் அளித்த பேட்டி:

வட மாநில இளைஞரை தாக்கி, 'ரீல்ஸ்' எடுத்து வெளியிட்டது கொடூரச்செயல். இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு காவல் துறை அடக்க வேண்டும். எந்த அரசாக இருந்தாலும், இப்படிப்பட்ட கொடூர செயல்களை வளர விடக் கூடாது.

அரசியலிலோ, சமூகத்திலோ, நம்மை விட மாறுபட்ட கருத்துகளோடு இருப்பவர்கள் மீது வெறுப்புணர்வு வளர்ந்து வருகிறது. அரசியல் வாயிலாக உருவாகும் இந்த வெறுப்புணர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.

எனக்கு, காங்கிரசில் சுல்தானும் தெரியாது, சக்கரவர்த்தியும் தெரியாது. மேலிடத்தில் இருப்பதால், எதையாவது கருத்தைச் சொல்கின்றனர். எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், நிறை குறை இருக்கத்தான் செய்யும்.

வாழ்வாதாரம் தேடி தமிழகத்திலிருந்து யாரும் உத்தர பிரதேசத்துக்கு போவதில்லை. அங்கிருந்து தான் இங்கு வருகின்றனர்.

அதை வைத்துப் பார்க்கப் போனால், தமிழகம் தான் வளர்ந்துள்ளது. இந்த உண்மையை புரியாமல் தான் பலரும் கருத்துச் சொல்கின்றனர். அந்தக் கருத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us