ADDED : டிச 04, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
அரசியல் செய்வதற்காகவே சிலர், வேண்டுமென்றே சேற்றை வீசியுள்ளனர். என் மீதும், அதிகாரிகள் சட்டையிலும் பட்டது. யார் அதனை செய்தனர் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நபர் எந்த கட்சியை சேர்ந்தவர்; சில மாதங்களுக்கு முன் அவரது கட்சி நிர்வாகிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையும் பலருக்கும் தெரியும்.
சேறு அடித்தவர்கள் குறித்து கவலையில்லை. இதை வைத்து அரசியலாக்க அவர்கள் விரும்பினர். ஆனால், நாங்கள் அதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை. மழை நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துகிறோம்.
இவ்வாறு பொன்முடி கூறினார்.