sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிடைத்ததோ நூறு நாள் வேலை அதிலும் சம்பளம் இல்லையாம் *அரசுக்கு பழனிசாமி கண்டனம்

/

கிடைத்ததோ நூறு நாள் வேலை அதிலும் சம்பளம் இல்லையாம் *அரசுக்கு பழனிசாமி கண்டனம்

கிடைத்ததோ நூறு நாள் வேலை அதிலும் சம்பளம் இல்லையாம் *அரசுக்கு பழனிசாமி கண்டனம்

கிடைத்ததோ நூறு நாள் வேலை அதிலும் சம்பளம் இல்லையாம் *அரசுக்கு பழனிசாமி கண்டனம்


ADDED : ஜன 22, 2025 06:38 PM

Google News

ADDED : ஜன 22, 2025 06:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை' என, தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை, 150 நாட்களாகவும், சம்பளம் 300 ரூபாயாகவும் அதிகரிக்கப்படும்; 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று, கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள், பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள். இந்த சம்பளத்தை நம்பியே, அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுதும் கடந்த இரண்டு மாதங்களாக, அந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களை பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு, தி.மு.க., அரசு தள்ளியுள்ளது.

பல மாவட்டங்களில், ஜனவரி மாதம் வேலை வழங்கப்படவில்லை. எனவே, பணியாளர் சம்பளத்தை உடனே வழங்குவதுடன், அவர்களுக்கு வேலையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us