ADDED : ஜன 28, 2026 08:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரை வைத்து கட்சி நடத்தும் அ.திமு.க.,வினர், அவரை முழுமையாக மறந்து விட்டனர். அது எனக்கு பிடிக்கவில்லை. அதனாலேயே, அக்கட்சியில் இருந்து வெளியேறினேன்.
நடிகர் விஜய், ஊழல் கட்சிகளை விமர்சித்ததால், 'செங்கோட்டையனை அருகில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்து எப்படி பேசலாம்?' என கேட்டு என்னை வம்புக்கிழுக்கின்றனர். என் மீதான காழ்ப்புணர்ச்சியால், ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது. நான் தவறு செய்ததற்கான முகாந்திரம் இல்லை என, வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது. இந்த வழக்கால், சில ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலை இருந்தது.
வழக்கின் நிலை தெரியாமல், என்னை வைத்து, யாரேனும் விமர்சித்தால், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வேன். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், த.வெ.க., கூட்டணிக்கு வராதது, எங்கள் கட்சிக்கு நஷ்டமில்லை. ராமதாஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்வேன்.
- செங்கோட்டையன்,
மூத்த தலைவர், த.வெ.க.,

