sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ..

/

பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ..

பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ..

பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ..

1


ADDED : ஜூலை 18, 2025 04:02 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 04:02 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ''தி.மு.க.,விடம் ஆறு எம்.எல்.ஏ., சீட்டுக்காக நான் காத்து கிடக்கவில்லை,'' என, தர்மபுரியில் நடந்த ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ பேசினார்.

கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

நான் மாநில கல்லுாரியில் படித்தபோது, மாணவர்கள் கூட்டத்தில் பேசியதை பார்த்து, முன்னாள் முதல்வர் காமராஜர் என்னை காங்கிரசில் சேர அழைத்தார். ஆனால், நான் தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக கூறி மறுத்து விட்டேன்.

மிசா சட்டத்தில் கைதாகி, கடைசியாக விடுதலையானது நான் தான். தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பின், ம.தி.மு.க.,வை துவங்கினேன். அப்போதும் நான், தி.மு.க.,வை எதிர்க்கவில்லை. ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வதாக அறிவித்தேன். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற முடிவு தவறாக முடிந்து விட்டது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, அவர் வைத்திருந்த இரண்டு சயனைடு குப்பிகளில் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதை நான் இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன்.

ஹிந்துத்துவா சக்திகளை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க.,வை ஆதரித்து வருகிறேன். ஆறு சீட்டுக்காக காத்து கிடக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us