sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழ்த்தாய் வாழ்த்தையே முடக்குவேன்: சீமான் அதிரடி சபதம்

/

தமிழ்த்தாய் வாழ்த்தையே முடக்குவேன்: சீமான் அதிரடி சபதம்

தமிழ்த்தாய் வாழ்த்தையே முடக்குவேன்: சீமான் அதிரடி சபதம்

தமிழ்த்தாய் வாழ்த்தையே முடக்குவேன்: சீமான் அதிரடி சபதம்


ADDED : அக் 21, 2024 06:05 AM

Google News

ADDED : அக் 21, 2024 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாமக்கல்லில் நேற்று அளித்த பேட்டி:

'திராவிட நல் நாடு' என்ற வார்த்தையை தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விட்டு விட்டனர் என்பதற்காக, ஸ்டாலின் முதற்கொண்டு, அனைத்து கட்சியினரும் கொந்தளிக்கின்றனர்.

கோரிக்கையாலோ, வலியுறுத்தலாலோ திராவிட நாடு அமைத்துவிட முடியுமா? அப்படியொரு நாடு எங்கே இருக்கிறது என புரியும்படி யாராலும் சொல்ல முடியுமா? திராவிட நாட்டின் எல்லை எது என்றாவது சொல்வரா?

இலக்கியத்தில், வரலாற்றில் திராவிட நாடு என்பது எங்கு உள்ளது. தமிழனை ஏமாற்றி, தாங்கள் வசதியாக ஆள்வதற்கு திராவிட நாடு என சொல்கின்றனர்.

நான் உண்மையான தமிழன். அதனால் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்தை முற்றிலும் முடக்குவேன். அதற்கு பதிலாக வேறு பாடல் கொண்டு வருவேன்.

அரசு நிகழ்ச்சிகளில் அதுவே பாடப்படும். திராவிடனுக்கென தனித்த அடையாளத்துடன் கூடிய மொழி என எதுவும் உண்டா? தமிழ்தான் எங்கள் மொழி. தமிழர்கள் என்பது இனத்தின் அடையாளம்.

தமிழ்த்தாய் வாழ்த்து தேவையில்லை; ஆட்சிக்கு வந்ததும் அதை முடக்குவேன் என, 2016 முதல் கூறி வருகிறேன். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக, பாரதிதாசன் பாடலைக்கூட கொண்டு வருவேன்.

திராவிடம், திராவிடம் எனக்கூறி திட்டமிட்டு அனைவரையும் வீழ்த்துகின்றனர். ஆனால், கீழடி நாகரிகத்தை தமிழக நாகரிகம் என சொல்ல மறுக்கின்றனர். யார் திராவிடர் என்பது குறித்து விவாதிக்க, அமைச்சர் மகேஷ் தயாராக இருக்க வேண்டும்.

தனித்து நிற்க தி.மு.க.,வுக்கு தைரியமில்லை. நடிகர் விஜய் மற்றும் என்னை பார்த்து பயப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேதனையாக உள்ளது!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக நீக்கப்படும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். அவருடைய கருத்தை ஏற்க முடியவில்லை; வேதனையாக இருக்கிறது. யாரையும் பாராட்டுவதாக இருந்தாலும், துாற்றுவதாக இருந்தாலும் அவர் தமிழ் மொழியில்தான் பேசுகிறார். அந்த வகையில் தமிழ் மொழியைப் போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன்; முடக்குவேன் என்று பேசுவதெல்லாம், அவருக்கே சரியாக உள்ளதா என தெரியவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை கல்வியின் ஒரு அங்கமாகப் பார்க்கிறோம். அதனால், சீமான் போன்றவர்கள் பேச்சு கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.மகேஷ், அமைச்சர், தமிழக பள்ளிக் கல்வித்துறை



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us