sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அன்பு, உரிமை அதிகமிருந்தால் அதிக அளவு சண்டை நடக்கும்'

/

'அன்பு, உரிமை அதிகமிருந்தால் அதிக அளவு சண்டை நடக்கும்'

'அன்பு, உரிமை அதிகமிருந்தால் அதிக அளவு சண்டை நடக்கும்'

'அன்பு, உரிமை அதிகமிருந்தால் அதிக அளவு சண்டை நடக்கும்'

1


ADDED : ஜூன் 30, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 02:27 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லையில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியதாவது:

அன்பும், உரிமையும் அதிகமிருக்கும் இடத்தில் தான் அதிகளவு சண்டையும் நடக்கும். நம்மில் நடக்கும் சண்டைகளை எல்லாம் மறந்து, அனைத்து மனமாச்சரியங்களையும் மறந்து தேர்தல் பணியை செய்ய வேண்டும். அனைத்து தொகுதிகளையும் வென்று காட்டுவோம் என தி.மு.க., தலைவருக்கு அளித்த உறுதியை சாத்தியமாக்க வேண்டும். எப்போதும் இணைய மாட்டோம் என கூறிவிட்டு, பிரிந்து கிடந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த தேர்தலை பா.ஜ., சந்திக்கிறது.

தமிழகத்தில் இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என சொன்னவர்களை எல்லாம் ஒரே அணியில் திரட்டி பா.ஜ., தேர்தலை சந்திக்கிறது. காரணம், தி.மு.க.,வை பார்த்து எதிர்க்கட்சி கூட்டணி பயந்து விட்டது. அண்ணாதுரை, ஈ.வெ.ரா.,வை கொச்சைப்படுத்தி காணொளி வெளியிட்டதை எதிர்த்து கேட்கக்கூட திராணி இல்லாதவர்கள் அ.தி.மு.க.,வை நடத்துகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நெல்லையில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நேரு மற்றும் கனிமொழி எம்.பி.,






      Dinamalar
      Follow us