அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அபராதம் போடுங்க! அரசுக்கு ஐகோர்ட் யோசனை
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அபராதம் போடுங்க! அரசுக்கு ஐகோர்ட் யோசனை
ADDED : மார் 22, 2025 05:56 AM
சென்னை : 'அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்துக்கு சுமை ஏற்படுத்துவதை விடுத்து, உடனே அபராதம் விதிக்கலாம்' என, தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர் இனப்படுகொலையை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில், அரியலுாரில் ரயில் மறியலில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்பட, 1,000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் சிவசங்கர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தி உள்ளதாக கூறி, இரண்டு வழக்குகளையும் ரத்து செய்தார்.
அப்போது, 'அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்து, நீதிமன்றத்துக்கு சுமை ஏற்படுத்துவதற்கு பதிலாக, உடனே அபராதம் விதிக்கலாமே' என, அரசுக்கு யோசனை தெரிவித்தார்.
இதேபோல, 2021ம் ஆண்டு சட்டசபைதேர்தலில், திருச்சிகாந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், எம்.எல்.ஏ., இனிகோஇருதயராஜ் பிரசாரத்தில்ஈடுபட்டார்.
கொரோனா விதிகளை மீறியதாக, இனிகோ இருதயராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கையும், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ரத்து செய்து உத்தரவிட்டார்.