sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடிகை வனிதா விஜயகுமாருக்கு எதிராக இளையராஜா வழக்கு

/

நடிகை வனிதா விஜயகுமாருக்கு எதிராக இளையராஜா வழக்கு

நடிகை வனிதா விஜயகுமாருக்கு எதிராக இளையராஜா வழக்கு

நடிகை வனிதா விஜயகுமாருக்கு எதிராக இளையராஜா வழக்கு


ADDED : ஜூலை 12, 2025 02:11 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், 'சிவராத்திரி துாக்கம் ஏது' என, இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குனர் ராபர்ட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படம், நேற்று தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து, 1990ல் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற, 'சிவராத்திரி தூக்கம் ஏது' என்ற, பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தான் இசையமைத்த பாடலை, தன் அனுமதியின்றி, மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும், பாடலை மாற்றி அமைத்து உள்ளதாகவும், இளையராஜா தரப்பில், சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவில், 'இது, காப்புரிமை சட்டத்தை மீறிய செயல். உடனே பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் முறையீடு செய்தார்.

இதையடுத்து நீதிபதி, ஜூலை 14ம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us