sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டவிரோதமாக மணல் குவித்து அதிக விலைக்கு விற்பனை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

/

சட்டவிரோதமாக மணல் குவித்து அதிக விலைக்கு விற்பனை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சட்டவிரோதமாக மணல் குவித்து அதிக விலைக்கு விற்பனை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சட்டவிரோதமாக மணல் குவித்து அதிக விலைக்கு விற்பனை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


ADDED : ஜூலை 30, 2011 04:32 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'சட்டவிரோதமாக மணலை குவித்து வைத்து, அதிக விலைக்கு விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு பதிலளிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் யுவராஜ் தாக்கல் செய்த மனு: சட்டவிரோத மணல் குவாரியை தடுப்பதற்காக, அரசே மணல் குவாரியை கையில் எடுத்தது. நேரடியாக மணல் சப்ளை செய்வதற்காக அரசு 92 டெப்போக்களை அமைத்தது. லாரிகளில் மணல் நிரப்புவதற்காக, 'லோடிங் கான்ட்ராக்டர்'களை அரசு நியமித்தது. இங்கு தான் பிரச்னை துவங்கியது.

லாரிகளில் மணலை நிரப்ப வேண்டிய, 'லோடிங் கான்ட்ராக்டர்கள்' வியாபாரிகளாக மாறினர். இவர்கள் இரண்டாம் விற்பனை என மணலை விற்க துவங்கினர். தற்போது இரண்டாம் விற்பனைக்காக, 612 தனியார் மையங்கள் செயல்படுகின்றன. இரண்டு யூனிட் மணல், 626 ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், தனியார் மையங்களில் இதை, 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். வாகன செலவு, டிரைவர் சம்பளம் என சேர்த்து, வெளிச்சந்தைக்கு வரும் போது, 9,000 ரூபாய் விலை வருகிறது.

தனியார் தான் இரண்டாவது விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் அதிக விலைக்கு விற்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், தமிழக அரசு ஒரு அரசாணையை பிறப்பித்தது. சட்டவிரோத மணல் குவாரியை தடுப்பதற்காக, மணலை தேக்கி வைத்து லாரிகளில் கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்துவதற்காக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்தி, சட்ட விரோத மணல் கிடங்குகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டவிரோத குவாரி மற்றும் மணலை தேக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் இந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும். இரண்டாம் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு தள்ளிவைத்த, 'முதல் பெஞ்ச்' அரசாணையை மீறி சட்டவிரோதமாக மணலை குவித்து அதிக விலைக்கு விற்பவர்கள் மீது, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பதிலளிக்கவும் உத்தரவிட்டது.








      Dinamalar
      Follow us