sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டவிரோதமாக கடத்தல்; 11 கிலோ தங்கம், விவசாய கிருமி நாசினிகள் பறிமுதல்

/

சட்டவிரோதமாக கடத்தல்; 11 கிலோ தங்கம், விவசாய கிருமி நாசினிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக கடத்தல்; 11 கிலோ தங்கம், விவசாய கிருமி நாசினிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக கடத்தல்; 11 கிலோ தங்கம், விவசாய கிருமி நாசினிகள் பறிமுதல்


ADDED : ஜன 04, 2025 11:52 AM

Google News

ADDED : ஜன 04, 2025 11:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: சட்டவிரோதமாக கடத்தப்பட்ட, 11 கிலோ தங்கம், விவசாய கிருமி நாசினிகள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக விவசாய கிருமி நாசினிப் பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இலங்கை யாழ்பாணம் மாவட்டம் வேலணை வள்ளிக்காடு, கல்லுண்டாய்முனை கடற்கரையில், சிறப்பு அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட விவசாய கிருமி நாசினிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில், 3 பேரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதேபோல், இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அப்போது, இலங்கை கடற்படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு கடத்த இருந்த 11.300 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us