sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு செய்த 4975 பேர் கைது! தெற்கு ரயில்வே தகவல்

/

சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு செய்த 4975 பேர் கைது! தெற்கு ரயில்வே தகவல்

சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு செய்த 4975 பேர் கைது! தெற்கு ரயில்வே தகவல்

சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு செய்த 4975 பேர் கைது! தெற்கு ரயில்வே தகவல்

3


ADDED : ஜன 21, 2025 07:37 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:37 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு செய்த 4975 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்;

இந்தியா முழுவதும் ரயில்வேயில் போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வேயின் வணிக பிரிவு அதிகாரிகள், ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவை இணைந்து இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், டிக்கெட் கவுன்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஒரே நேரத்தில் பெருவாரியான டிக்கெட்டுகளை எடுப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதன்படி, கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில், சட்ட விரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 4975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரூ.53 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 1,24,529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, தட்கல் மற்றும் 100க்கும் மேற்பட்ட முன்பதிவு முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து 26,442 இணையதள ஐ.டி.கள் முடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us