sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பத்தாண்டுகளில் கையும், களவுமாக பிடிபட்டவர்கள்தான் அதிகம்; 2023-24ல் லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறைக்கு முதலிடம்

/

பத்தாண்டுகளில் கையும், களவுமாக பிடிபட்டவர்கள்தான் அதிகம்; 2023-24ல் லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறைக்கு முதலிடம்

பத்தாண்டுகளில் கையும், களவுமாக பிடிபட்டவர்கள்தான் அதிகம்; 2023-24ல் லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறைக்கு முதலிடம்

பத்தாண்டுகளில் கையும், களவுமாக பிடிபட்டவர்கள்தான் அதிகம்; 2023-24ல் லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறைக்கு முதலிடம்

1


ADDED : ஜன 25, 2025 05:02 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:02 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதாக கையும், களவுமாக பிடிபட்டவர்கள்தான் அதிகம். அதிலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை முதலிடத்தில் உள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் சில அதிகாரிகள், அலுவலர்களால் ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், போலீஸ், தீயணைப்பு என பாகுபாடின்றி லஞ்சம் ஊடுருவியுள்ளது. நேற்றுமுன்தினம்கூட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிளான் அப்ரூவலுக்கு அனுமதி தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் பற்குணன் கைது செய்யப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில் 2023-24ல் அதிகபட்சமாக 155 வழக்குகளை போலீசார் விசாரித்து வருகின்றனர். 2023-24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீதுதான் அதிகபட்மாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் மின்வாரியம் மீது 26 வழக்குகள், ஊரக வளர்ச்சித்துறை - 22, உள்ளாட்சி அமைப்புகள் - 21 வழக்குகள், சர்வே - 18, போலீஸ் - 10, பத்திரப்பதிவு - 8, சமூகநலத்துறை - 4 வணிகவரித்துறை, கூட்டுறவு, வேளாண், கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை - 2, தொழிலாளர் நலத்துறை - 3 வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us