sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பால் உற்பத்தியாளர்கள் கணக்கில் ஊக்கத்தொகை' அமைச்சர் தகவல்

/

'பால் உற்பத்தியாளர்கள் கணக்கில் ஊக்கத்தொகை' அமைச்சர் தகவல்

'பால் உற்பத்தியாளர்கள் கணக்கில் ஊக்கத்தொகை' அமைச்சர் தகவல்

'பால் உற்பத்தியாளர்கள் கணக்கில் ஊக்கத்தொகை' அமைச்சர் தகவல்


ADDED : ஜன 01, 2025 10:26 PM

Google News

ADDED : ஜன 01, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு, அரசு அறிவித்த 3 ரூபாய் ஊக்கத் தொகை நேரடியாக செலுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகம் முழுதும் கடந்த 2019 - 20ம் ஆண்டில், 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை, 7 லட்சம் லிட்டர் அதிகரித்து, தற்போது தினசரி 30 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நலச் சங்கங்கள் கோரிக்கையின்படி, மாவட்ட ஒன்றியத்தில் இருந்து, பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு, அரசு அறிவித்த, 3 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வழியாக, இப்பணி இந்த வாரம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us