ADDED : ஜூன் 14, 2024 12:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 2016 ம் ஆண்டுக்கு முந்தைய சம்பள விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2016ம் ஆண்டுக்கு முந்தைய சம்பள விகிதத்தில் சம்பளம் வாங்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். 1.1.2024 முதல் உயர்த்தி வழங்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சம்பளத்தில் 239 % ஆக உயர்த்தி வழங்கப்படும். ஜன.,பிப்., மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் எனக்கூறியுள்ளது.

