ADDED : மார் 01, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : புதிதாக அறுவடை செய்யப்பட்ட பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், விலை கிலோ 150 ரூபாயாக குறைந்துள்ளது.
மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு உற்பத்தி குறைந்ததால், பூண்டு விலை மெல்ல ஏறி வந்தது. ஜன., மாதம் அதிகபட்சமாக ஒரு கிலோ பூண்டு, சில்லறை விலையில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதிய பூண்டு அறுவடை துவங்கினால் விலை குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதன்படி, தற்போது, புதிய பூண்டு அறுவடை துவங்கியதால், விலையும் குறைந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மளிகை விற்பனை சந்தையில், ஒரு கிலோ பூண்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

