ADDED : பிப் 27, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக விவசாயிகள், விளைபொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது, விற்று பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிடங்கு வசதி இல்லாத சிறு, குறு விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான கிடங்குகளை பயன்படுத்தி, தானியங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்து கொள்ளலாம்.
உடனடி நிதி தேவைக்கு, தானியங்களுக்கு ஈடாக கூட்டுறவு வங்கிகளில் தானிய ஈட்டு கடன் பெறும் நடைமுறையும் உள்ளது. இந்த கடன் உச்ச வரம்பை நீட்டிக்க கோரிக்கைகள் வந்தன. எனவே, அதிக பயனாளிகள் பயனடைய வசதியாக, தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பை, 10 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- - பெரியகருப்பன்
கூட்டுறவு துறை அமைச்சர்.

