sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'குரூப் --- 4' காலியிடம் 8,932 ஆக அதிகரிப்பு

/

'குரூப் --- 4' காலியிடம் 8,932 ஆக அதிகரிப்பு

'குரூப் --- 4' காலியிடம் 8,932 ஆக அதிகரிப்பு

'குரூப் --- 4' காலியிடம் 8,932 ஆக அதிகரிப்பு


ADDED : அக் 10, 2024 12:40 AM

Google News

ADDED : அக் 10, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் -- 4' பணியில், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு, 20.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கான எழுத்துத் தேர்வு, ஜூன் 9ம் தேதி நடந்து முடிந்தது. இத்தேர்வை, 15.88 லட்சம் பேர் எழுதினர்.

அதிகம் பேர் தேர்வு எழுதியுள்ளதால், 480 இடங்களை கடந்த செப்டம்பரில் அதிகமாக்கிய டி.என்.பி.எஸ்.சி., தற்போது மேலும், 2,208 இடங்கள் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

இதன் வாயிலாக, குரூப் - 4 பணியிடங்களுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை, 8,932 ஆக உயர்ந்துள்ளது. தேர்வு எழுதியவர்களுடன், இந்த காலி இடங்களை ஒப்பிடும்போது, ஒரு பணியிடத்துக்கு, 177 பேர் போட்டியிட உள்ளனர்.






      Dinamalar
      Follow us