பஸ் கட்டணத்தை உயர்த்தியும் கழகங்களின் நஷ்டம் குறையல
பஸ் கட்டணத்தை உயர்த்தியும் கழகங்களின் நஷ்டம் குறையல
ADDED : டிச 10, 2024 11:59 PM
மாநில அரசு போக்குவரத்து கழகங்களில், 2017 - 18 முதல் 2021 - 22 வரையிலான ஆண்டுகளில், ஊழியர்களின் செலவினங்கள் மட்டுமே, 55.20 சதவீதத்தில் இருந்து, 63.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. பஸ்களின் எண்ணிக்கை 22,517ல் இருந்து 20,304 ஆகக் குறைந்துள்ளது.
வயது முதிர்ந்த பஸ்கள் எண்ணிக்கை, 46.47 சதவீதத்தில் இருந்து, 69.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சாத்தியமற்ற செயல்பாடுகள் காரணமாக, கழகங்களின் மொத்த கடன் 21,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் மொத்த வருவாய், 2021 - 22ல், 9,661.26 கோடி ரூபாய்; மொத்த நஷ்டம், 2021 - 22ல் 48,478.50 கோடி ரூபாய்.
கடந்த, 2018ல் பஸ் கட்டண உயர்வுக்கு பின்னும், வருவாய் உயரவில்லை. உரிய இடைவெளியில் கட்டணங்களை உயர்த்தாமல், 2018 ஜனவரியில், 88.89 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பயணியர் எண்ணிக்கை, 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், 4,077 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
மேலும், அன்றாட நடவடிக்கைகளுக்கு, ஊழியர்களின் பணம் 4,500 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, முறையற்ற செயல்.