ADDED : பிப் 23, 2025 03:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை கண்டித்து, மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுடன் அவர்களது ஐந்து இயந்திர படகுகளும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம், ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.