உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 01, 2026 05:45 AM

அ நிறம் | அளவு
சென்னை: மாநில தகவல் ஆணையத்தின் இணையதளம் மூன்று நாட்களாக முடங்கியுள்ளது.
மாநில தகவல் ஆணையத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், https://www.tnsic.gov.in/ என்ற தகவல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், விசாரணை குறித்த நாள், நேரம் போன்ற தகவல்களும் பதிவேற்றப்படும். அதன் அடிப்படையில், மனுதாரர்கள் சேவைகளை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இந்த இணையதளம் கடந்த மூன்று நாட்களாக முடங்கி உள்ளது.
இப்படி அடிக்கடி முடங்குவது வாடிக்கையாகி விட்டதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
