நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக ஒற்றுமை தினம்
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என ஒற்றுமையின் வலிமையை அறிவுறுத்தியவர் பாரதியார். உலகில் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக ஐ.நா., சார்பில் டிச., 20ல் சர்வதேச மனித ஒற்றுமை தினம் கடைபிடிக்கப் படுகிறது.
உலகில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஜாதி, மத மோதல், உள்நாட்டு சண்டை, நாடுகளுக்கிடையே போர், பயங்கரவாத செயல்கள் குறையவில்லை. போரினால் மக்கள் அகதியாக மாறும் அவலம் உள்ளது. மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, இதன்மூலம் வறுமையை ஒழிப்பதே இத்தினத்தின் நோக்கம்.

