sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜல்லிக்கட்டு போட்டியில் விபரீதம்; மாடு முட்டி இன்ஸ்., படுகாயம்

/

ஜல்லிக்கட்டு போட்டியில் விபரீதம்; மாடு முட்டி இன்ஸ்., படுகாயம்

ஜல்லிக்கட்டு போட்டியில் விபரீதம்; மாடு முட்டி இன்ஸ்., படுகாயம்

ஜல்லிக்கட்டு போட்டியில் விபரீதம்; மாடு முட்டி இன்ஸ்., படுகாயம்


UPDATED : ஏப் 03, 2025 04:43 AM

ADDED : ஏப் 03, 2025 01:47 AM

Google News

UPDATED : ஏப் 03, 2025 04:43 AM ADDED : ஏப் 03, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, விராலிமலை தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் மற்றும் இலுப்பூர் ஆர்.டி.ஓ., அக்பர் அலி துவங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டிருக்கும் போது, வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளில் ஒன்று திடீரென தாவிக்குதித்து காளை உரிமையாளர் கட்டுப்பாட்டில் இருந்து மீறி, ஆக்ரோஷமாக ஓடி, திடீரென அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் என்பவரை முட்டித் தள்ளியது.

இதில், இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனுக்கு, எம்.எல்.ஏ., டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அங்கிருந்த ஜல்லிக்கட்டு முகாம் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில், அதிக ரத்தம் வெளியானதால் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us