sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பள்ளியில் பயிற்சி பிரான்ஸ் நிறுவனம் ஆர்வம்

/

அரசு பள்ளியில் பயிற்சி பிரான்ஸ் நிறுவனம் ஆர்வம்

அரசு பள்ளியில் பயிற்சி பிரான்ஸ் நிறுவனம் ஆர்வம்

அரசு பள்ளியில் பயிற்சி பிரான்ஸ் நிறுவனம் ஆர்வம்


ADDED : அக் 26, 2024 11:37 PM

Google News

ADDED : அக் 26, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பிரான்ஸ் நாட்டில் உள்ள, 'டசால்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனம், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.

தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 'டிட்கோ' நிறுவனத்தின், 'டான்காம்' மையம் வாயிலாக, 'டசால்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனம், இதுவரை, 20,000 மாணவர்களுக்கு, உயர்தொழில்நுட்ப பயிற்சி வழங்கியுள்ளது. தமிழகத்தில், 'கனவு ஆசிரியர்' விருது பெற்ற ஆசிரியர்கள் உடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளார்.

அந்நாட்டில் உள்ள டசால்ட் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று, அதன் தலைமை அலுவலகத்திற்கு மகேஷ் சென்றார். அதிகாரிகளுடன் கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 'தமிழகத்தில் அதிக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க காத்திருக்கிறோம்' என, டசால்ட் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு, முதல்வரிடம் எடுத்துரைத்து, அதை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக, மகேஷ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us