UPDATED : பிப் 09, 2024 08:30 PM
ADDED : பிப் 09, 2024 07:49 PM
சென்னை: ஜூன் 23-ல் இடை நிலை ஆசிரியர் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
1,768 இடைநிலை ஆசிரியர் பணியிங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் பிப்.,14 ம் தேதி முதல் மார்ச் 15 ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு கட்டணமாக பொது மறறும் பிற பரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.ஏ. மற்றும் எஸ்.டி.பிரிவினர் தேர்வு கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும். தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டும எசலுத்த வேண்டும. மேலும் தேர்வு குறித்த முழுமையான விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் www.trb.tn.gov.in தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

