sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாகமண்ணில் சர்வதேச பாரா கிளைடிங் மார்ச் 14ல் துவக்கம்

/

வாகமண்ணில் சர்வதேச பாரா கிளைடிங் மார்ச் 14ல் துவக்கம்

வாகமண்ணில் சர்வதேச பாரா கிளைடிங் மார்ச் 14ல் துவக்கம்

வாகமண்ணில் சர்வதேச பாரா கிளைடிங் மார்ச் 14ல் துவக்கம்


ADDED : மார் 03, 2024 12:14 AM

Google News

ADDED : மார் 03, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : கேரளா இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் சர்வதேச பாராகிளைடிங் திருவிழா மார்ச் 14ல் துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.

அங்கு பாராகிளைடிங் நடத்துவதற்கு தேவையான வசதி உள்ளதால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு சர்வதேச அளவில் பாராகிளைடிங் மார்ச் 14ல் துவங்கி மார்ச் 17 வரை நடக்கிறது.

கேரள சுற்றுலாதுறையின் கீழ் செயல்படும் கேரள சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் இந்திய பாராகிளைடிங் சங்கத்தின் தொழில் நுட்பத்தின் உதவியுடன் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய வான்வெளி சாகச விளையாட்டாக கருதப்படும் திருவிழாவில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நேபாளம் ஆகிய நாடுகள் தமிழகம், டில்லி, கோவா, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகாவைச் சேர்ந்த சர்வதேச மற்றும்தேசிய அளவில் புகழ் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கிளைடர்கள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியில் அவர்கள் நிகழ்த்தும் சாகசங்களை ஆயிரக்கணக்கனோர் பார்த்து ரசிக்க வாய்ப்புள்ளதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us