sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பரங்குன்றம் விவகாரம் நீதி விசாரணை தேவை; தவ்ஹீத் ஜமாத் செயலாளர் பேட்டி

/

திருப்பரங்குன்றம் விவகாரம் நீதி விசாரணை தேவை; தவ்ஹீத் ஜமாத் செயலாளர் பேட்டி

திருப்பரங்குன்றம் விவகாரம் நீதி விசாரணை தேவை; தவ்ஹீத் ஜமாத் செயலாளர் பேட்டி

திருப்பரங்குன்றம் விவகாரம் நீதி விசாரணை தேவை; தவ்ஹீத் ஜமாத் செயலாளர் பேட்டி


ADDED : பிப் 16, 2025 05:13 AM

Google News

ADDED : பிப் 16, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அன்சாரி கூறினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு கையாண்ட விதம் சரியில்லை. திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என எச்.ராஜா பேசியதை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. தர்காவில் ஆடு, கோழி பலியிட சட்டப்படி என்ன தடை இருக்கிறது.

இந்த விவகாரத்தில் அரசு நிர்வாகம், கலெக்டர், வருவாய் அதிகாரிகள் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் சங் பரிவார் அமைப்பினர் கலவரத்தை துாண்ட முயற்சிக்கிறார்கள்.தொடர்ந்து வழக்கு போட்டுக்கொண்டே இருக்கின்றனர். மத மோதலுக்கு திட்டமிடுகிறார்கள். அரசு உடனே தலையிட்டு தடுக்க வேண்டும்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இவ்விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடக்கூடாது, மக்களை முட்டாளாக்க கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us